Details
போவதை கண்டு கலங்காமல் வருவதை கண்டு மயங்காமல் மெய் தளராமல் கை நடுங்காமல் உண்மையை பொய்யை உணர்ந்தவனே கவலை இல்லாத மனிதன்! வாழ்க்கை என்பது நாடகமே வந்து போனவர் ஆயிரமே கொண்டு சென்றவர் யாரும் இல்லை கொடுத்து போனதும் நினைவும் இல்லை அந்த நாடகம் இன்னும் முடியவில்லை மறுநாளைக்கு வருவதும் தெரியவில்லை வாழ்வை அறிந்தவன் சம்சாரி வாழப்பயந்தவன் சன்யாசி கண்ணீர் வடிப்பவன் மூடனடா காலத்தை வென்றவன் வீரனடா நல் இன்பத்தை தேடி உறவாடு நீ எழுந்திரு மனிதா விளையாடு உலகத்தை அறிந்தவன் துணிந்தவன் அவனே கவலை இல்லாத மனிதன்!